Friday, January 21, 2011
Tuesday, January 11, 2011
சுற்றறிக்கை 1/11
1.) 3.1.11 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் நம் கிளைகள் உள்ள ஊர்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் உழ்வர்கள் கல்ந்துக்கொண்டனர்.நாம் விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கு இலாபமான விலை கிடைத்தால் தான் ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு,இடுபொருள் விலையேற்றம்,நம் வாழ்க்கைச் செலவுகளின் கட்டுக்கடங்காத உயர்வு ஆகியவற்றை சமாளிக்க முடியும்; நம் மண்ணையும்,வேளாண்மையையும் காக்க முடியும் என்ற உண்மையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இந்த சிந்தனையை உழவர்களிடையே போதிய அளவு நாம் ஏற்படுத்தவில்லை என்பதையே ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை காட்டியது.ஆகவே ஊரில் உள்ள அனைத்து உழவர்களும் தம் சொந்த முயற்சியில் இது போன்ற நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வை உருவாக்குவதிலும் புதிய கிளைகள் அமைப்பதிலும் ஒவ்வொரு உறுப்பினரும் ஈடுபட வேண்டும்.
2.) 12.1.11 நாளிட்ட ஜூனியர் விகடன் நம் அமைப்பு போன்ற பெயரை (தமிழ் உழவர் முன்னணி) பயன்படுத்தி இழிவான் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.அதுகுறித்து ஜூனியர் விகடனுக்கு மறுப்பறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதை அவர்கள் அடுத்த இதழில் வெளியிடாவிட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
3.) விளைவித்த நெல்லை விற்க இயலாமல் உழவர்கள் கலங்கி நிற்கின்றனர். விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.தமிழக அரசு குடிமைப் பொருள் அங்காடி,மருத்துவமனை ,சிறைச்சாலை,போன்ற தேவைகளுக்காக மத்திய தொகுப்பிலிருந்து (பஞ்சாப்,ஒரிசா அரிசி) அரிசி வாங்கக் கூடாது என்றும் ஆந்திரா,கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்கள் தங்கள் சந்தைக்காடாக தமிழகத்தை மாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழகத்தின் தேவைக்கான நெல்லை தமிழக உழவர்களிடமே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நம் வற்புறுத்தி வருகிறோம்.தமிழக சந்தையை பாதுகாக்கும் நடவடிக்கையை உடனே எடுக்கும்படி தமிழக அரசை கோருகிறோம்.இக்கருத்தை உழவர்களிடையே நாம் பரப்ப வேண்டும்.
4.)அறுவடை தொடங்கி இருப்பாதால் அரசு உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்
5.) நிதி பற்றாக்குறை தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது நம் செயற்பாட்டிற்கு ஏற்ற நிதி வரத்து இல்லை.ஆகவே அவரவர் ஊர்களில் அறுவடை தொடங்கியதும் செயலாளரை தொடர்புக் கொண்டு நிதி திரட்ட வேண்டும்.ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தது ரூ.100-/ கொடுக்க வேண்டும் என்ற உணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும்.
எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் செயல்வடிவம் பெற அனைத்து உறுப்பினர்களும் பணியாற்ற வேண்டுமென மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
சி.ஆறுமுகம்
செயலர்
Saturday, January 8, 2011
ஜூனியர் விகடனின் அவதூறு செய்திக்கு; தமிழக உழவர் முன்னணி மறுப்பு
“உதயமாகிறது லெட்டர் பேடு கட்சிகள் உதவுகிறதா அண்ணாமலை யுனிவர்சிட்டி”,என்ற தலைப்பில் 12-01-2011 ஜூனியர் விகடன் இதழில் க.பூபாலன் என்பவர் எழுதியுள்ள செய்தி எங்களது தமிழக உழவர் முன்னணி குறித்து அடிப்படையற்ற அவதூறுகளைப் பரப்பும் வகையில் அமைந்துள்ளது.
அண்ணாமலைப் பல்கலைகழகத்திற்கு எதிராக சுவரொட்டி பரப்புரை நடத்தி மிரட்டல் விடுத்து சீட்டுகள் பெறும் தரகு வேலையில் ஈடுபடுவதாக சில அமைப்பு பெயர்களை அக்கட்டுரை அடுக்குகிறது.அதில் ’தமிழ் உழவர் முன்னணி’ என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது.
எங்கள் அமைப்பு தமிழக உழவர் முன்னணி.இது கட்சியல்ல,கட்சி சார்பற்ற உழவர் அமைப்பு நாங்கள் லெட்டர் பேடு அமைப்பும் அல்ல.பெருந்திரள் உழவர்களைத் திரட்டி தமிழ்நாட்டு உழவர் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் அமைப்பு.அது மட்டுமின்றி, சிதம்பரத்தில் மட்டும் இருக்கும் அமைப்பல்ல கட்லூர் மாவட்டத்தின் வேறு பல பகுதிகளிலும், விழுப்புரம், தஞ்சை,நாகை,தூத்துக்குடி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து இயங்கி வரும் மக்கள் திரள் அமைப்பு.
எங்கள் அமைப்பின் போராட்ட செய்திகளும்,பொதுக் கூட்ட செய்திகளும், எங்கள் அமைப்பு நிர்வாகிகளின் நேர்காணல்களும் பசுமை விகடனிலும், ஜூனியர் விகடனிலும், தினமணி, தினதந்தி, தினகரன், தினமலர்,மாலைமுரசு உள்ளிட்ட பல்வேறு நாளேடுகளிலும் பல தொலைக்காட்சிகளிலும் வெளியாகி வருகின்றன.
அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் வேளாண் புலம் நடத்தும் உழவர் பயிற்சி முகாம்களிலும் ,கருத்தரங்குகளிலும் எங்களது உழவர்கள் தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றன.அதே நேரம் இப்பல்கலைகழகத்தின் வேளாண் புல பேராசிரியை ஒருவர் மான்சாண்டோவின் மரபீனி கத்தரி விதைக்கு இசைவு வழங்கியதில் முக்கிய பங்காற்றிய போது அதனை எதித்து எங்கள் தமிழக உழவர் முன்னணி பரப்புரை-போராட்டங்கள் நடத்தியது.
எந்தக் காலத்திலும்,எந்த இடத்திலும் பதவி,பணத்திற்காக பல்லிளிக்காத நேர்மை உரமிக்க போராட்ட அமைப்பு எங்கள் தமிழக உழவர் முன்னணி. நாங்கள் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் சீட்டு வாங்கும் தரகு வேலையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுவது எந்த அடிப்படையுமற்ற அவதூறு ஆகும். ஊரறிந்த உண்மை இவ்வாறு இருக்க ஜூ.வி செய்தியாளர் பூபாலனுக்கு மட்டும் இது தெரியாமல் போனது வியப்பளிக்கிறது.
நாங்கள் பெரிதும் மதிக்கும் விகடன் குழும ஏடு ஒன்றிலிருந்து எங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளிவந்திருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.
இந்த உண்மையைத் தெளிவுபடுத்தி விளக்கச் செய்தி வெளியிடுமாறு ஜூனியர் விகடன் ஆசிரியர் குழுவினரை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்